1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆறு (எ) அரவிந்த் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் சிறையிலடைப்பு
சென்னை,செங்குன்றத்தைச் சேர்ந்த ஆறு (எ) அரவிந்த், வ/29, என்பவர் H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் மீது ஒரு 1 கொலை வழக்கு 2 கொலை முயற்சி வழக்குகள், உட்பட 5 குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஆறு (எ) அரவிந்த் 08.09.2020 அன்று வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் அவர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி , தான் திருந்தி வாழப்போவதாகவும் , 1 வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார். ஆனால் , ஆறு (எ) அரவிந்த் 13.3.2021 அன்று H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லையில் ஒருவரை தாக்கி வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு , நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். எழுதிக் கொடுத்த நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, செயல்முறை நடுவராகிய வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர், திருமதி. G.சுப்புலட்சுமி அவர்கள் குற்றவாளி, ஆறு (எ) அரவிந்திற்கு கு.வி.மு.ச. பிரிவு 110 ன் கீழ் நன்னடத்தை பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த 1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து , மீதமுள்ள 175 நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார் . அதன்பேரில் , குற்றவாளி ஆறு (எ) அரவிந்த் நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் முதியோர்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை பறித்தவர், தண்டையார்பேட்டை காவல் குழுவினரால் கைது.
அமைந்தகரை பகுதியில் கொலை குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவான அந்தோணி ( எ ) சொரி அந்தோணி என்பவர் K-3 அமைந்தகரை காவல் குழுவினரால் கைது- 1 ஆட்டோ கைப்பற்றப்பட்டது
எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (எ) ராகுல் என்பவர் R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் குழுவினரால் கைது . 3 சவரன் தங்க சங்கிலி கைப்பற்றப்பட்டது.
மணலி புதுநகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காரில் கடத்திச் சென்று ரூ.3 லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒரு குற்றவாளி அப்துல் மாலிக் ( எ ) பாஷா ( எ ) சாகுல் அமீது என்பவர் M-7 மணலி புதுநகர் காவல் காவல் குழுவினரால் கைது
சென்னை , மணலி புதுநகரைச் சேர்ந்த பாலமுருகன், வ/43, என்பவர் 22.01.2021 அன்று அவருக்கு தெரிந்த அசோக்குமார் என்பவர் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச வேண்டும் என காரில் அழைத்துச் சென்று அசோக்குமார் மற்றும் அவரது 2 நண்பர்கள் சேர்ந்து பாலமுருகனிடம் பணம் ரூ .5 லட்சம் உடனடியாக தர வேண்டும் எனவும் , இல்லையெனில் கொலை செய்துவிடுவதாகவும் கூறி பாலமுருகனை மிரட்டி பாலமுருகன் ரூ .3 லட்சம் பெற்றுக் கொண்டு சற்றுதொலைவில் பாலமுருகனையும் இறக்கிவிட்டு தப்பிச் சென்றது தொடர்பாக, பாலமுருகன், M-7 மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து M-7 மணலி புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி கடத்திலில் ஈடுபட்ட அசோக் குமார், வ/38, மணலி என்பவரை 26.02.2021 அன்று கைது செய்தனர். இந்நிலையில் காவல் குழுவினர் தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான அப்துல் மாலிக் ( எ ) பாஷா ( எ ) சாகுல் அமீது, வ/25, திருவொற்றியூர் , என்பவரை 17.3.2021 அன்று கைது செய்து, அவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய Hyundai Accent கார் கைப்பற்றுதல் செய்யப்பட்டு அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.