Read Time1 Minute, 9 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 15 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி(34) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் தந்தை பார்த்தசாரதியை இது குறித்து கேட்கும் போது பார்த்தசாரதி சிறுமியின் தந்தையை மிரட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியின் தந்தை பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் நிலைய ஆய்வாளர் திருமதி. தேன்மொழி அவர்கள் விசாரணை மேற்கொண்டு, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பார்த்தசாரதியை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா