Read Time1 Minute, 5 Second
மதுரை : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு (பொது பிரிவினருக்கு) மாநிலம் முழுவதும் இன்று (12.01.2020) நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் 6 எழுத்து தேர்வு மையங்களில் 10,659 நபர்கள் தேர்வு எழுதினர். மதுரை மாநகரில் 795 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணியினை ஆய்வுசெய்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை