Read Time1 Minute, 2 Second
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 22.09.2019 அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(29) . இவர் மீது அருமனை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.போலிசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து முருகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் வடநெரே IAS அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி அருமனை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பெருமாள் அவர்கள் முருகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.