Read Time1 Minute, 5 Second
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பண்டி கங்காதர் IPS மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாகவும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சமூக சேவை பிரிவு தேசிய பொது செயலாளர் திரு.தீபான்ஞ்சி மற்றும் நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.